பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 ஜூன், 2020

விநாயகர் கவசம் - சீர் பிரித்தது

வளர்சிகையை பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க! 

வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்திர தேகம் மதோற்கடர் தாம்  அமர்ந்து காக்க! 

விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க! 

புருவம் தமைத் தளர்வில் மகோதரர் காக்க! 

தடவிழிகள்  பாலச்சந்திரனார் காக்க! 

கவின் வளரும் ஆதாரம் கஜமுகர் காக்க! 

தால் அங்கணக்டரீடர்  காக்க! 

நவில் சிபுகம் கிரிசைசுதர் காக்க! 

தனி வாக்கை விநாயகர் தாம் காக்க! 

அவிர்நகை துன்முகர் காக்க! 

அள் எழில் செஞ்செவி பாசபாணி காக்க! 

தவிர்தலுறும் இளங்கொடி போல் வளர்மணி நாசியைத் சிந்தி தார்த்தர் காக்க! 

காமரு பூ முகம் தன்னைக் குணேசர் நனிக் காக்க! 

களம் கணேசர் காக்க! 

வாமமுறும் இரு தோலும் வயங்கு கந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க! 

ஏமமுறு மணிமலை விக்கின விநாசன் காக்க! 

இதயம் தன்னைத் தோமகலும் கண நாதர் காக்க! 

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க! 

பக்கம் இரண்டையும் தராதரர் காக்க! 

பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க! 

விளங்கிலிங்கம் வியாள பூடணர்தாம் காக்க! 

தக்கக்குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க! 

கச்சனத்தை அல்லல் உக்க கணபன் காக்க  

ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க! 

தாழ் முழந்தாள் மகா புத்தி காக்க! 

இருபதாம் ஏகதந்தர் காக்க!

வாழ்கரம் சுப்பிரப்பிரசாதனர் காக்க! 

முன்கையை வணங்குவார் நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க! 

விரல் பதுமத்தர் காக்க! 

கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க! 

கிழக்கினில் புத்தீசர் காக்க! 

அக்கினியில் சித்தீசர் காக்க! 

மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க! 

விக்கினவர்த்தனர் மேற்க்கென்னும் திக்கு அதனிற் காக்க ! 

வாயுவில் கசகன்னர் காக்க! 

திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க! 

வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க! 

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க! 


இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க! 

இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய் இவையாதி 
உயிர் திறத்தால் வரும் துயரும் முடிவில்லாத வேகமுறும் பிணி பலவும் 
விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க! 

மதி ஞானம் தவம் தானம் மானம் ஒளி புகழ் குளம் வண்சரீரம் முற்றும் 

பதிவான தனம் தானியம் கிரகம் மனைவி மைந்தர் 

பயில் நட்பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க! 

காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர் 
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க! 

வென்றி சீவிதம் பகபிலர் காக்க! 

கரியாதி எல்லாம் விகடர் காக்க! 

என்று இவ்வாறு இதனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் 
இடையூறு ஒன்றும் உறா! 
முனிவர்காள்; அறிமின்கள்; யார் ஒருவர் ஓதினாலும் 
அன்று ஆங்கவர் தேகம் பிணியற  வச்சிரதேகம் ஆகி மன்னும்! 

**************************************************

பக்தியுடனே இக்கவசத்தை பாராயணம் செய்பவர்களுக்குப் 

பிணியும் வறுமையும் பேய் பூதங்களால் உண்டாகின்ற பல 
துன்பங்களும் கவலைகளும் பாவம் முதலியவைகளும் நீங்கும். 
பெரும் செல்வமும் தீர்க்காயுளும் களத்திர புத்திர மித்திராதிகளும் 
உண்டாகும். இதைப் படித்தாலும் ஒருவர் சொல்லக் கேட்டாலும் 
பூசித்தாலும் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக