பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 மார்ச், 2021

தடைகளை தவிடுபொடியாக்கும் திருவெழுக்கூற்றிருக்கை

திருஞான சம்பந்தர் அருளிய திருவெழுக் கூற்றிருக்கை 

பாடல் தலம் : சீர்காழி 

இறைவன் : தோணியப்பர் 

பாடல் பயன்  : தொடர்ச்சியாக தடைப்படும் வேலை, படிப்பு, தேர்வு , வரன் , சுபகாரியங்கள் என   வரும் செயல்கள் அனைத்தும் தடைகள் நீங்கி சுபமாகநடந்தேறும் ; தந்தையின் உடல் நலம் பெறவும்  ,  ஒருவரது மன நலம் சீராகவும், புண்ணியம் செய்தும் பலன் இல்லாமல் தவிக்கும் நிலையிலும் இதனைப்படித்து தோணியப்பரின் நிறைந்த அருளைப்பெற்று நலமுடன் வாழலாம்.



ஓர் உரு ஆயினை ; மான்  ஆங்காரத்து 

ஈர்  இயல்பாய்  ஒரு விண்முதல்  பூதலம்  

ஒன்றிய  இருசுடர்  உம்பர்கள்  பிறவும் 

படைத்து  அளித்து  அழிப்ப மும்மூர்த்திகள்  ஆயினை ; 

இருவரோடு ஒருவன்  ஆகி நின்றனை . 

ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்

முப்பொழுது ஏத்திய  நால்வர்க்கு ஒளிநெறி 

காட்டினை ; நாட்டம் மூன்றாகக் கூட்டினை 

இருநதி  அவரமோடு ஒருமதி சூடினை ; 

ஒரு தாள் ஈர்அயில் மூவிலைச் சூலம் 

நாற்கால் மான் மாரி , ஐந்தலை அரவம் 

ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து 

இருகோட்டு ஒரு  கரி ஈடு அழித்து உரித்தனை 

ஒருதனு இருக்கால் வளைய வாங்கி, 

முப்புரத்தோடு நானிலம் அஞ்ச , 

கொன்று தலத்து உற  அவுணரை அருத்தனை 

ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம் , 

முக்குணம் , இருவளி , ஒருங்கிய வானோர் 

ஏத்த நின்றனை  ஒருங்கிய மனத்தோடு 

இருபிறப்பு ஓர்ந்து , முப்பொழுது குறை முடித்து 

நான்மறை ஓதி , ஐவகை வேள்வி 

அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி 

வரன்முறை பயின்ற எழுவான்தனை வளர்க்கும் 

பிரமபுரம் பேணினை ; 

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை ; 

இகலி அமைந்து உணர்ப்புகலி அமர்ந்தனை ; 

பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விலங்கினை ; 

பாணி மூவுலகும் புதைய , மேல் மிதந்த 

தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி 

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை ; 

வரைபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை ; 

ஒருமலை எடுத்த இருத்திரள் அரக்கன் 

விறல் கெடுத்து அருளினை ; புறவம் புரிந்தனை ; 

முந்நீர்த் துயின்றோன் , நான்முகன் அறியாப் 

பண்போடு நின்றனை சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அருவகைத் தேரரும் 

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; 

எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;

ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், 

மறைமுதல் நான்கும் 

மூன்று காலமும், தோன்ற நின்றனை; 

இமையின் ஒருமையும் , ஒருமையின் பெருமையும் 

மறுஇலா மறையோர் 

கழுமல, முதுபதிக்  கவுணியன் கட்டுரை, 

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் ; 

அனைய தன்மையை ஆதலின், நின்னை 

நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே ! 


- திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக