பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 ஜூன், 2020

கோளறு திருப்பதிகம்!

கோளறு திருப்பதிகம் 

இயற்றி அருளியவர் : திருஞான சம்பந்தர் 


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே 
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 01

என்பொடுகொம்போடு ஆமை  இவை மார்பில் இலங்க 
எருது ஏறி ஏழை உடனே  
பொன் பொதிமத்தமாலை புனல் சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும் 
உடனாய நாள்கள் இவை தாம் 
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 02

உருவலர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 03

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள்  பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா மிகவே. 04

நஞ்சணிகண்டன் எந்தை  மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் இரும் இடியும் மின்னும் 
மிகையான பூதம் அவையும் 
அஞ்சிடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 05

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 06

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வன் அடைவார் 
ஒப்பிள மதியுமப்பும் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 07

வேள்பட விழிசெய்தன்று விட மேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்து என் 
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல்சூழ் இலங்கை அரையன்றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 08

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சல மகளோடெருக்கு முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 09

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும்  மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரோடும் அணைவாதில் அழிவிக்கும்  அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு  மிகவே. 10

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும்  அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக